இஸ்லாமிய
ஷரீஆவின் உன்னத நோக்கங்கள் மகாஸிதுஷ் ஷரீஆ என அழைக்கப்படுகின்றது.
மகாஸித் என்பது மக்ஸத்எ ன்பதன் பன்மையாகும்.
இலக்கு, நோக்கம், அடைவு, எதிர்பார்க்கும்
விடயம் போன்ற கருத்துக்களை இப்பதம் குறித்து நிற்கின்றது. ~~இஸ்லாமிய
ஷரீஆவில் மகாஸித் என்பது இஸ்லாமிய சட்டங்களின் இலக்கு அல்லது நோக்கம் அல்லது அடைவு, அல்லது
எதிர்பார்க்கும் விடயம் என்று பொருள் கொள்ளப்படும்||
அதாவது ஷரீஆ தனது போதனைகள் மூலம் அடைய
விரும்புகின்ற இலக்குகளைக் குறிக்கின்றது. இக்கருத்தில் வேறு பல பிரயோகங்களையும்
இமாம்கள் பயன்படுத்திவந்துள்ளனர். மஸாலிஹ்- நலன்கள்;
அஸ்ரார்- இரகசியங்கள்; இலல்
- காரணிகள்; நதாஇஜ் - விளைவுகள், மஆல்
- அடைவுகள் போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.